கோவை: கோவை மாவட்டத்தில் வருவாய் துறை சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக்கூடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 300 பேருக்கு உணவை வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டத்தில் வருவாய் துறை சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக்கூடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 300 பேருக்கு உணவை வழங்கினார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், மருந்து கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவையில் உணவு கிடைக்காமல் தவிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு கிடைக்க வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமுதாய உணவுக்கூடம் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இங்கு உணவு வழங்கப்படுகிறது. கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை உணவு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கூடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி ஆய்வு செய்தார். பின்பு 300க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உணவும், தண்ணீர் பாட்டிலும் வழங்கினார். இந்த ஆய்வின்போது வடக்கு வட்டாட்சியர் மகேஷ்குமார் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், மருந்து கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவையில் உணவு கிடைக்காமல் தவிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு கிடைக்க வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமுதாய உணவுக்கூடம் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இங்கு உணவு வழங்கப்படுகிறது. கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை உணவு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கூடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி ஆய்வு செய்தார். பின்பு 300க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உணவும், தண்ணீர் பாட்டிலும் வழங்கினார். இந்த ஆய்வின்போது வடக்கு வட்டாட்சியர் மகேஷ்குமார் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.