மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி கடைகள் - மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ இன்று துவங்கி வைத்தார்

கோவை: ஊரடங்கு உத்தரவால் மக்கள் நடமாடுவதை தடுக்க மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி கடைகளை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ இன்று துவங்கி வைத்தார்.

கோவை: ஊரடங்கு உத்தரவால் மக்கள் நடமாடுவதை தடுக்க மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி கடைகளை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ இன்று துவங்கி வைத்தார். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து டெல்லி சென்று திரும்பிய 20 பேருக்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள் வெளியே நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது, அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மார்க்கெட் கூட மூடப்பட்டுள்ளது. 



இதனை தொடர்ந்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேட்டுப்பாளையம் நகராட்சி நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை துவங்கியுள்ளது. இந்த விற்பனையை இன்று மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ சின்னராஜ் துவக்கி வைத்தார். 



100 ரூபாய் விலைக்கு விற்கப்படும் இந்த தொகுப்பில் ஒரு கிலோ தக்காளி, அரை கிலோ வெங்காயம், கத்தரிக்காய், புடலங்காய், பச்சைமிளகாய், தேங்காய், கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை, வெண்டைக்காய் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது. 

இதனை பயன்படுத்தி கொண்டு பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க நகராட்சி ஆணையாளர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...