கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவினை தேடி அழையும் நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் வனவிலங்குளின் தாகத்தை தீர்க்க வனத்துறை சார்பில் வனத்திலேயே செயற்கையாக தண்ணீர் தொட்டிகளை அமைத்து அதில் போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பி வனவிலங்குளின் தண்ணீர் தேவையை ஒரளவிற்கு பூர்த்தி செய்து வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவினை தேடி அழையும் நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் வனவிலங்குளின் தாகத்தை தீர்க்க வனத்துறை சார்பில் வனத்திலேயே செயற்கையாக தண்ணீர் தொட்டிகளை அமைத்து அதில் போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பி வனவிலங்குளின் தண்ணீர் தேவையை ஒரளவிற்கு பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியான மரக்கிடங்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீரினை தேடி ஏழு யானைகள் மற்றும் ஒரு குட்டி யானை கொண்ட கூட்டம் வந்துள்ளது.
அப்போது யானைகள் கூட்டமாக தண்ணீர் குடித்து கொண்டிருந்த போது ஒரு குட்டியானை ஒன்று தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டது, இதனையடுத்து அந்த யானை கூட்டத்தில் இருந்த சில யானைகள் அங்கிருந்து சென்று விட்ட நிலையில் தாய் யானையும் உடன் வந்த மற்றொரு யானையும் அந்த தொட்டியையே சுற்றி சுற்றி வந்துள்ளது, இதனை கண்ட வனத்துறையினர் குட்டியானையை மீட்க ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி யானையை விரட்டி விட்டு குட்டியானையை மீட்க திட்டமிட்டனர்.
ஆனால் அங்கிருந்த தாய் யானை சுமார் 2 மணி நேரமாக போராடி தனது விடா முயற்சியால் குட்டியானையை காப்பற்றி தன்னுடன் அழைத்து சென்றது, இதனால் வனத்துறையினர் நிம்மதியடைந்தனர்.