கோவை: வால்பாறையில் சமூக விலக்கை கடைபிடிக்க அரசு மேல்நிலைப் பள்ளியில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: வால்பாறையில் சமூக விலக்கை கடைபிடிக்க அரசு மேல்நிலைப் பள்ளியில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மளிகை, காய்கறி, பால், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை சமூக விலக்கை கடைபிடித்து திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சமூக விலக்கை மறந்து பல்வேறு கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும், தேயிலை தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஆயிரக்கணக்கானவர்கள் வால்பாறைக்கு வருவர். இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனை தவிர்க்கும் பொருட்டு வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் உத்திரவின் பேரில், வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மளிகை பொருட்கள், காய்கறிகள், இறைச்சி, கோழி மற்றும் மீன் கடைகளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல, மக்கள் வரிசையாக ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்கள் வாங்கிச்செல்லும்படி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கழிப்பறை, கை கழுவும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.