கோவை: கோவையில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 32 லிட்டர் கள் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கோவை: கோவையில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 32 லிட்டர் கள் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து மது கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் மதுபானங்கள் வாங்க குடிமகன்கள் பல்வேறு வகையில் முயல்கின்றனர்.
இந்நிலையில், கோவையில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ராசுகவுண்டர் என்பவரிடம் 7 லிட்டர், பொள்ளாச்சி ஆலம்பாளையம் சண்முகசுந்தரத்திடம் 8 லிட்டர், பெ.ந.பாளையம் சதீஷிடம் 10 லிட்டர், பிளிச்சி சுப்ரமணியம் என்பவரிடம் 7 லிட்டர் என 32 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதே போல், ஒக்கிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து, அன்னூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோரிடம் இருந்து தலா 7 பாட்டில்கள் என விற்பனை செய்ய வைத்திருந்த மொத்தம் 14 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து மது கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் மதுபானங்கள் வாங்க குடிமகன்கள் பல்வேறு வகையில் முயல்கின்றனர்.
இந்நிலையில், கோவையில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ராசுகவுண்டர் என்பவரிடம் 7 லிட்டர், பொள்ளாச்சி ஆலம்பாளையம் சண்முகசுந்தரத்திடம் 8 லிட்டர், பெ.ந.பாளையம் சதீஷிடம் 10 லிட்டர், பிளிச்சி சுப்ரமணியம் என்பவரிடம் 7 லிட்டர் என 32 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதே போல், ஒக்கிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து, அன்னூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோரிடம் இருந்து தலா 7 பாட்டில்கள் என விற்பனை செய்ய வைத்திருந்த மொத்தம் 14 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.