கோவை: வால்பாறை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை கீழ் உருளிகல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(48) ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 31ம் தேதி சோலையார் அணை மானம்பள்ளி வாய்க்காலில் குளிக்க தன் நண்பர்களுடன் சென்று உள்ளார்.
அப்போது, வேகமாக ஓடிய தண்ணீரில் அவர் இழுத்து செல்லப்பட்டு உள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட பாலமுருகன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு வைக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை கீழ் உருளிகல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(48) ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 31ம் தேதி சோலையார் அணை மானம்பள்ளி வாய்க்காலில் குளிக்க தன் நண்பர்களுடன் சென்று உள்ளார்.
அப்போது, வேகமாக ஓடிய தண்ணீரில் அவர் இழுத்து செல்லப்பட்டு உள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட பாலமுருகன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு வைக்கப்பட்டு உள்ளது.