ஈஷாவில்‌ ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை வதந்தி பரப்புவோர்‌ மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌, ஈஷா கோரிக்கை

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில்‌ உள்ள ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ்‌ தொற்றுக்கான அறிகுறி இல்லை. எனவே, இதுதொடர்பாக ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர்‌ மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறோம்‌, என ஈஷா யோகா மையம் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில்‌ உள்ள ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ்‌ தொற்றுக்கான அறிகுறி இல்லை. எனவே, இதுதொடர்பாக ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர்‌ மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறோம்‌, என ஈஷா யோகா மையம் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்:-

உலக சுகாதார நிறுவனம்‌ கோவிட்‌ - 19 வைரஸை ஒரு நோய்‌ தொற்று (Pandemic) என அறிவிப்பதற்கு முன்பாகவும்‌, மத்திய, மாறில அரசுகள்‌ ஊரடங்கு உத்தரவு மற்றும்‌ பயண தடைகளை விதிப்பதற்கு பல நாட்கள்‌ முன்பாகவே ஈஷாவுக்கு வந்த வெளிநாட்டினருக்கு சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து அதை தீவிரமாக செயல்படுத்தினோம்‌.

முன்னெச்சரிக்கை நடவழக்கையாக, சீனா, ஜப்பான்‌, சிங்கப்பூர்‌ உள்ளிட்ட கோவிட்‌ -19 வைரஸ்‌ தாக்கிய நாடுகளை சேர்ந்கோர்‌ ஈஷா யோகா மையத்துக்கு வர வேண்டாம்‌ என்று வேண்டுகோள்‌ விடுத்தோம்‌. மேலும்‌, கோவிட்‌ - 19 வைரஸ்‌ தாக்கிய நாடுகளுக்கு சென்றவர்கள்‌, அந்த நாடுகளின்‌ விமானநிலையங்கள்‌ வழியாக வந்தவர்களும்‌ ஈஷாவுக்கு வர வேண்டாம்‌ என்று தெரிவித்து இருந்தோம்‌.

ஈஷாவுக்கு வந்த மற்ற வெளிநாட்டினர்கள்‌ கட்டாயம்‌ 28 நாட்கள்‌ தனிமையில்‌ இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கட்டாய மருத்துவ பரிசோதனை மற்றும்‌ உடல்ரீதியான இடைவெளி (social distancing) நெறிமுறைகளை (Protocols) தற்போது வரை ஈஷா பின்பற்றி வருகிறது.

ஈஷா யோகா மையத்தில்‌ தங்கி இருப்பவர்கள்‌ மற்றும்‌ தன்னார்வலர்களுக்கு சாதாரண நாட்களில்‌ கூட கடுமையான மருத்துவ மற்றும்‌ சுகாதார நெறிமுறைகள்‌ பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போது அவர்கள்‌ 2 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாக்கி உள்ளோம்‌. ஈஷா மையத்தில்‌ தங்கி பாதுகாப்பு பணி, தூய்மை பணி மற்றும்‌ பிற களப்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ அனைத்து ஊழியர்களுக்கும்‌ இந்த நெறிமுறை பொருந்தும்‌. 

மேலும், ஈஷா வளாகத்தின்‌ பல இடங்களில்‌ கையை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும்‌ கிருமிநாசனிகளும்‌ (Hand sanitizers) வைக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி மாதத்தில்‌ இருந்தே மாநில சுகாதார அதிகாரிகள்‌ ஈஷா யோகா மையத்துக்கு தொடர்ந்து வருகை தந்து மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு வருகின்றனர்‌. இதுவரை இங்கு தங்கியுள்ள ஒருவருக்கு கூட கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே, இதுதொடர்பாக, ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர்‌ மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறோம்‌.

ஈஷா யோகா மையம்‌ அனைத்து விதமான மருத்துவ நெறிமுறைகளை அமல்படுத்தும்‌ திறனுடன்‌ இருப்பது மட்டுமின்றி, தனிமைப்படுத்துதல்‌ மற்றும்‌ உடல்ரீதியான இடைவெளியை ஆரம்பத்திலேயே அமல்படுத்துவிட்டது. 

கொரோனா தொற்றால்‌ பாதுக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம்‌ என ஈஷா சமீபத்தில்‌ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...