கோவை: கோவை ஈச்சனாரி பாடசாலை பகுதியில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் தங்கி கட்டுமான பணியில் (டைல்ஸ் பதித்தல்) ஈடுபட்டு வந்துள்ளனர்.
கோவை: கோவை ஈச்சனாரி பாடசாலை பகுதியில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் தங்கி கட்டுமான பணியில் (டைல்ஸ் பதித்தல்) ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு மருத்துவம், திருமணம், துக்க நிகழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே பிரயாணம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர்.

யாரும் வெளி மாநிலங்களுக்கு செல்ல கூடாது என உத்தரவு பிறபிக்கபட்டு உள்ள நிலையில் இவர்கள் தங்களது பகுதியில் இருந்து பைபாஸ் வழியாக நடந்தே சென்று சிங்காநல்லூர் சென்றுவர்கள் அங்கிருந்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனம் மூலமாக பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
அவிநாசி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இவர்களை விசாரணை மேற்கொண்டதில் தங்கள் ஊருக்கு செல்ல உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மீண்டும் அவர்களை கோவைக்கே திருப்பி அனுப்பினர்.

இதனை தொடர்ந்து தாங்கள் வசித்து வந்த இடத்தில் வந்து சேர்ந்தவர்களுக்கு சமூக இடைவெளி இல்லாமல் பயணம் செய்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது என கருதி அத்துமீறி பயணம் மேற்கொண்ட வட மாநிலத்தவர்களுக்கு மதுக்கரை தாலுக்கா அலுவலகத்தில் பரிசோதனை செய்யபட உள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு மருத்துவம், திருமணம், துக்க நிகழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே பிரயாணம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர்.

யாரும் வெளி மாநிலங்களுக்கு செல்ல கூடாது என உத்தரவு பிறபிக்கபட்டு உள்ள நிலையில் இவர்கள் தங்களது பகுதியில் இருந்து பைபாஸ் வழியாக நடந்தே சென்று சிங்காநல்லூர் சென்றுவர்கள் அங்கிருந்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனம் மூலமாக பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
அவிநாசி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இவர்களை விசாரணை மேற்கொண்டதில் தங்கள் ஊருக்கு செல்ல உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மீண்டும் அவர்களை கோவைக்கே திருப்பி அனுப்பினர்.

இதனை தொடர்ந்து தாங்கள் வசித்து வந்த இடத்தில் வந்து சேர்ந்தவர்களுக்கு சமூக இடைவெளி இல்லாமல் பயணம் செய்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது என கருதி அத்துமீறி பயணம் மேற்கொண்ட வட மாநிலத்தவர்களுக்கு மதுக்கரை தாலுக்கா அலுவலகத்தில் பரிசோதனை செய்யபட உள்ளது.