கோவையிலிருந்து அத்தியாவசிய வாகனம் மூலம் சொந்த ஊருக்கு தப்பிய வடமாநிலத்தவருக்கு கொரோனா பரிசோதனை

கோவை: கோவை ஈச்சனாரி பாடசாலை பகுதியில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் தங்கி கட்டுமான பணியில் (டைல்ஸ் பதித்தல்) ஈடுபட்டு வந்துள்ளனர்.

கோவை: கோவை ஈச்சனாரி பாடசாலை பகுதியில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் தங்கி கட்டுமான பணியில் (டைல்ஸ் பதித்தல்) ஈடுபட்டு வந்துள்ளனர். 

இந்நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு மருத்துவம், திருமணம், துக்க நிகழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே பிரயாணம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர். 



யாரும் வெளி மாநிலங்களுக்கு செல்ல கூடாது என உத்தரவு பிறபிக்கபட்டு உள்ள நிலையில் இவர்கள் தங்களது பகுதியில் இருந்து பைபாஸ் வழியாக நடந்தே சென்று சிங்காநல்லூர் சென்றுவர்கள் அங்கிருந்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனம் மூலமாக பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

அவிநாசி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இவர்களை விசாரணை மேற்கொண்டதில் தங்கள் ஊருக்கு செல்ல உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மீண்டும் அவர்களை கோவைக்கே திருப்பி அனுப்பினர்.



இதனை தொடர்ந்து தாங்கள் வசித்து வந்த இடத்தில் வந்து சேர்ந்தவர்களுக்கு சமூக இடைவெளி இல்லாமல் பயணம் செய்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது என கருதி அத்துமீறி பயணம் மேற்கொண்ட வட மாநிலத்தவர்களுக்கு மதுக்கரை தாலுக்கா அலுவலகத்தில் பரிசோதனை செய்யபட உள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...