திருப்பூர்: திருப்பூரில் பிரசவ வலி எடுத்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதமானதால், போலீசார் ஜீப்பில் அழைத்துச் சென்று உரிய நேரத்தில் மருத்துவமனை சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் பிரசவ வலி எடுத்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதமானதால், போலீசார் ஜீப்பில் அழைத்துச் சென்று உரிய நேரத்தில் மருத்துவமனை சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் - வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகேஸ்வரிக்கு இன்று திடீரென பிரசவ வலி எடுத்தது. இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்த நிலையில், ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதமானது.
இந்த நிலையில், அந்த வழியாக ரோந்து பணிக்காக வந்த வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தகவலறிந்து அவரது போலீஸ் ஜீப்பில், சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி, கான்ஸ்டபிள் சதீஷ் ஆகியோருடன் மகாலட்சுமியை ஜீப்பில் ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய போலீசாரின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.
திருப்பூர் - வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகேஸ்வரிக்கு இன்று திடீரென பிரசவ வலி எடுத்தது. இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்த நிலையில், ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதமானது.
இந்த நிலையில், அந்த வழியாக ரோந்து பணிக்காக வந்த வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தகவலறிந்து அவரது போலீஸ் ஜீப்பில், சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி, கான்ஸ்டபிள் சதீஷ் ஆகியோருடன் மகாலட்சுமியை ஜீப்பில் ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய போலீசாரின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.