கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியை சேர்ந்த 7 பேர் டெல்லி சென்று வந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களது இரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதில் இரண்டு பேர் கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது தீவிர கண்காணிப்புக்கு வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பலரை மருத்துவ கண்காணிப்பில் வைக்க சுகாதாரத்துறை குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு ஆனைமலை பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆனைமலையில் இருந்து, காளியாபுரம், கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியை சேர்ந்த 7 பேர் டெல்லி சென்று வந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களது இரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதில் இரண்டு பேர் கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது தீவிர கண்காணிப்புக்கு வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பலரை மருத்துவ கண்காணிப்பில் வைக்க சுகாதாரத்துறை குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு ஆனைமலை பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆனைமலையில் இருந்து, காளியாபுரம், கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டது.