கோவை: வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெற்ற சிகிச்சைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெற்ற சிகிச்சைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை முடீஸ், சோலையார் அணை ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 5க்கும் மேற்பட்ட துணை நிலையங்களும் இயங்கி வருகின்றன.
வால்பாறையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய் போன்றவர்களுக்கு சிறப்பு சேவைகள் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகிறது. இதனால் பொள்ளாச்சி மற்றும் கோவைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சிகிச்சை பெற வேண்டியதில்லை.

மேலும், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதி பெற்று சுமார் 45 கோடியில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஆண்டு கணக்கெடுப்பின் படி வால்பாறை பகுதியில் எத்தனை பிரசவம் நடைபெற்றது, கர்ப்பிணிகள் எவ்வளவு பேர், எடை குறைவாக உள்ள குழந்தைகள், குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை என்பதை அந்தந்த சுகாதார மையங்களில் செவிலியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை முடீஸ், சோலையார் அணை ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 5க்கும் மேற்பட்ட துணை நிலையங்களும் இயங்கி வருகின்றன.
வால்பாறையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய் போன்றவர்களுக்கு சிறப்பு சேவைகள் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகிறது. இதனால் பொள்ளாச்சி மற்றும் கோவைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சிகிச்சை பெற வேண்டியதில்லை.

மேலும், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதி பெற்று சுமார் 45 கோடியில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஆண்டு கணக்கெடுப்பின் படி வால்பாறை பகுதியில் எத்தனை பிரசவம் நடைபெற்றது, கர்ப்பிணிகள் எவ்வளவு பேர், எடை குறைவாக உள்ள குழந்தைகள், குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை என்பதை அந்தந்த சுகாதார மையங்களில் செவிலியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.