திருப்பூர்: வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வந்தவர்கள் 1360 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வந்தவர்கள் 1360 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகளை பார்வையிட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திருப்பூரில் வீட்டு கண்காணிப்பில் 1360 பேர் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தின் திருப்பூர் உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிலையங்கள் தற்காலிக சந்தைகளாக மாற்றப்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், சனிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது எனவும் காய்கறிகளும், மருந்துகளும் அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகளை பார்வையிட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திருப்பூரில் வீட்டு கண்காணிப்பில் 1360 பேர் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தின் திருப்பூர் உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிலையங்கள் தற்காலிக சந்தைகளாக மாற்றப்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், சனிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது எனவும் காய்கறிகளும், மருந்துகளும் அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.