கோவை: அன்னூர் அருகே கிராமத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊருக்குள் நுழையும் அனைவரும் கைகளை சோப்பால் கழுவிய பின்பே அனுமதிப்போம் என பேனர் வைத்து அதனை உள்ளூர் இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கோவை: அன்னூர் அருகே கிராமத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊருக்குள் நுழையும் அனைவரும் கைகளை சோப்பால் கழுவிய பின்பே அனுமதிப்போம் என பேனர் வைத்து அதனை உள்ளூர் இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் - அவிநாசி சாலையில் உள்ளது குன்னத்தூராம் பாளையம் கிராமம். இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
தற்போது கொரோனோ வைரஸ் நோய் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த நோய் பரவலை தடுப்பதற்காக இந்த கிராம மக்கள் தங்களை தனிமைப்படுத்தி சுயகட்டுப்பாட்டுடன் இருந்து வருகின்றனர்.

இதனையடுத்து, கிராமத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊருக்குள் நுழையும் அனைவரையும் சுய சுத்தத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஊருக்குள் நுழைய வேண்டுமா கையை சோப்பால் கழுவிய பின்பே அனுமதிப்போம் என பேனர் வைத்து அதனை கண்காணிக்கவும் செய்கின்றனர் உள்ளூர் இளைஞர்கள்.
இதற்காக ஊரின் இரண்டு நுழைவு வாசலிலும் டேபிள் வைத்து, அதில் தண்ணீர் தொட்டியும் அருகில் சோப்புக்களையும் வைத்துள்ளனர். தங்கள் ஊருக்குள் வருவோர் யாராக இருந்தாலும் கை, கால்களை முழுமையாக சோப்பால் கழுவிய பின்னரே வரும்படி அறிவுறுத்தி உள்ளனர். மேலும், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இப்பகுதி மக்களை வெளியே அனுப்புகின்றனர்.
அதேபோல, கொரோணா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேனர் வைத்துள்ளனர். சுயகட்டுபாட்டினை கடைபிடிக்கும் இந்த கிராமத்தினர் போல அனைவரும் சுய காட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் - அவிநாசி சாலையில் உள்ளது குன்னத்தூராம் பாளையம் கிராமம். இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
தற்போது கொரோனோ வைரஸ் நோய் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த நோய் பரவலை தடுப்பதற்காக இந்த கிராம மக்கள் தங்களை தனிமைப்படுத்தி சுயகட்டுப்பாட்டுடன் இருந்து வருகின்றனர்.

இதனையடுத்து, கிராமத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊருக்குள் நுழையும் அனைவரையும் சுய சுத்தத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஊருக்குள் நுழைய வேண்டுமா கையை சோப்பால் கழுவிய பின்பே அனுமதிப்போம் என பேனர் வைத்து அதனை கண்காணிக்கவும் செய்கின்றனர் உள்ளூர் இளைஞர்கள்.
இதற்காக ஊரின் இரண்டு நுழைவு வாசலிலும் டேபிள் வைத்து, அதில் தண்ணீர் தொட்டியும் அருகில் சோப்புக்களையும் வைத்துள்ளனர். தங்கள் ஊருக்குள் வருவோர் யாராக இருந்தாலும் கை, கால்களை முழுமையாக சோப்பால் கழுவிய பின்னரே வரும்படி அறிவுறுத்தி உள்ளனர். மேலும், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இப்பகுதி மக்களை வெளியே அனுப்புகின்றனர்.
அதேபோல, கொரோணா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேனர் வைத்துள்ளனர். சுயகட்டுபாட்டினை கடைபிடிக்கும் இந்த கிராமத்தினர் போல அனைவரும் சுய காட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.