ஊருக்குள் நுழைவதற்கு கைகளை சோப்பால் கழுவிய பின்பே அனுமதி..! ஊர் நுழைவு வாயிலில் நின்று கண்காணிக்கும் அன்னூர் இளைஞர்கள்!

கோவை: அன்னூர் அருகே கிராமத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊருக்குள் நுழையும் அனைவரும் கைகளை சோப்பால் கழுவிய பின்பே அனுமதிப்போம் என பேனர் வைத்து அதனை உள்ளூர் இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனர்.

கோவை: அன்னூர் அருகே கிராமத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊருக்குள் நுழையும் அனைவரும் கைகளை சோப்பால் கழுவிய பின்பே அனுமதிப்போம் என பேனர் வைத்து அதனை உள்ளூர் இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் - அவிநாசி சாலையில் உள்ளது குன்னத்தூராம் பாளையம் கிராமம். இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

தற்போது கொரோனோ வைரஸ் நோய் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த நோய் பரவலை தடுப்பதற்காக இந்த கிராம மக்கள் தங்களை தனிமைப்படுத்தி சுயகட்டுப்பாட்டுடன் இருந்து வருகின்றனர். 



இதனையடுத்து, கிராமத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊருக்குள் நுழையும் அனைவரையும் சுய சுத்தத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஊருக்குள் நுழைய வேண்டுமா கையை சோப்பால் கழுவிய பின்பே அனுமதிப்போம் என பேனர் வைத்து அதனை கண்காணிக்கவும் செய்கின்றனர் உள்ளூர் இளைஞர்கள். 

இதற்காக ஊரின் இரண்டு நுழைவு வாசலிலும் டேபிள் வைத்து, அதில் தண்ணீர் தொட்டியும் அருகில் சோப்புக்களையும் வைத்துள்ளனர். தங்கள் ஊருக்குள் வருவோர் யாராக இருந்தாலும் கை, கால்களை முழுமையாக சோப்பால் கழுவிய பின்னரே வரும்படி அறிவுறுத்தி உள்ளனர். மேலும், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இப்பகுதி மக்களை வெளியே அனுப்புகின்றனர். 

அதேபோல, கொரோணா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேனர் வைத்துள்ளனர். சுயகட்டுபாட்டினை கடைபிடிக்கும் இந்த கிராமத்தினர் போல அனைவரும் சுய காட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...