கோவையில் பெண் மருத்துவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி; போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு சீல்!

கோவை: கோவையில் பெண் மருத்துவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் பணியாற்றிய போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பெண் மருத்துவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் பணியாற்றிய போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்த இரண்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்த ஈரோடு ரயில்வே பணியாளருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அப்பணியாளருக்கு உடல் நலக்குறைவு காரணமாக ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளித்த 42 வயது பெண் மருத்துவருக்கும் கொரோனா அறிகுறி தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் ஈரோட்டில் இருந்து கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு பணி மாறுதல் பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து அப்பெண் மருத்துவர் கொரோனா அறிகுறிகள் காரணமாக இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அம்மருத்துவர் பணியாற்றிய போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஈரோடு ரயில்வே மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அம்மருத்துவர் சிகிச்சை அளித்த நோயாளிகளின் விவரங்களும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...