கோவை: கோவை மாவட்ட சுகாதாரத் துறையின் கண்காணிப்பின் கீழ் வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 1014 பேரின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: கோவை மாவட்ட சுகாதாரத் துறையின் கண்காணிப்பின் கீழ் வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 1014 பேரின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் உள்ள 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்புகளையும் இதன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியாவில் பொது மக்கள் நடமாட்டத்தை குறைக்க மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வெளிநாடுகளுக்கு சென்று கோவை வந்தவர்களின் விவரம் தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவரங்களை மத்திய அரசு பொது சுகாதாரத்துறையிடம் நோய் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒப்படைத்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது;-
பாஸ்போர்ட்டுகளை ஆய்வு செய்ததில், 1,014 பேரின் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, அதிகாரிகள் மூலம், அவர்களது வீடுகளில், ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடந்து வருகிறது.
மேலும், இ.எஸ்.ஐ மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரை தவிர, புதிதாக 30 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் உள்ள 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்புகளையும் இதன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியாவில் பொது மக்கள் நடமாட்டத்தை குறைக்க மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வெளிநாடுகளுக்கு சென்று கோவை வந்தவர்களின் விவரம் தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவரங்களை மத்திய அரசு பொது சுகாதாரத்துறையிடம் நோய் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒப்படைத்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது;-
பாஸ்போர்ட்டுகளை ஆய்வு செய்ததில், 1,014 பேரின் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, அதிகாரிகள் மூலம், அவர்களது வீடுகளில், ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடந்து வருகிறது.
மேலும், இ.எஸ்.ஐ மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரை தவிர, புதிதாக 30 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.