திருப்புர்: ஊரடங்கு உத்தரவினை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை 50 தோப்புக்கரணம் மற்றும் இடைவிடாது கை தட்ட சொல்லி நூதன முறையில் பல்லடம் போலீசார் தண்டனை வழங்கினர்.
திருப்புர்: ஊரடங்கு உத்தரவினை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை 50 தோப்புக்கரணம் மற்றும் இடைவிடாது கை தட்ட சொல்லி நூதன முறையில் பல்லடம் போலீசார் தண்டனை வழங்கினர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி தேவையில்லாமல் அரசின் உத்தரவினை மீறி பலர் தமிழகம் முழுவதும் சுற்றிதிரிகின்றனர்.

இதே போன்று பல்லடத்தில் தேவையில்லாமல் சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளை பிடித்த பல்லடம் போலீசார் அவர்களை வெயிலில் நிற்க வைத்து 50 தோப்புக்கரணம் மற்றும் 30 நிமிடங்கள் இடைவிடாது கைதட்ட வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
மேலும், கொரோனா வைரஸின் தாக்கத்தினை புரிந்து கொண்டும், மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி தேவையில்லாமல் அரசின் உத்தரவினை மீறி பலர் தமிழகம் முழுவதும் சுற்றிதிரிகின்றனர்.

இதே போன்று பல்லடத்தில் தேவையில்லாமல் சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளை பிடித்த பல்லடம் போலீசார் அவர்களை வெயிலில் நிற்க வைத்து 50 தோப்புக்கரணம் மற்றும் 30 நிமிடங்கள் இடைவிடாது கைதட்ட வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
மேலும், கொரோனா வைரஸின் தாக்கத்தினை புரிந்து கொண்டும், மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.