நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ள ஏழு பேரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் கொராேனா தொற்று இல்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ள ஏழு பேரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் கொராேனா தொற்று இல்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-
"தமிழக முதல்வர் அறிவுரைப்படி சந்தை மட்டும் மார்க்கெட் பகுதிகளில் அதிகமாக மக்கள் கூடாத வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் உதகையில் சாந்தி விஜயா மைதானம் மற்றும் பஸ் நிலையம் ஆகிய இடங்கள் காய்கறிகள் வழங்கும் கடைகளாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல், மக்களின் நடமாட்டத்தை குறைக்க அரசு கூட்டுறவுத்துறை உழவர் சந்தை ஆய்வேட்டில் சார்பாக வாகனங்களில் காய்கறிகளை அந்தந்த இடங்களிலேயே கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனவும் பொதுமக்கள் அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவை மீறக்கூடாது என்றும் தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் மக்கள் நடமாடும் பகுதிகளில் கிருமிநாசினி தெறிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். தனியார் துறை சார்பில் 68 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கும் என்று தெரிவித்த அவர், நீலகிரி மாவட்டத்தில் 732 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர்கள் வெளியில் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ள ஏழு பேரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் கொராேனா தொற்று இல்லை என்றார்.
வெளிநாட்டிலிருந்து வந்த 147 பேர் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், 144 தடை உத்தரவை மீறியதாக 91 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.