உதகையில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை - மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ள ஏழு பேரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் கொராேனா தொற்று இல்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ள ஏழு பேரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் கொராேனா தொற்று இல்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

"தமிழக முதல்வர் அறிவுரைப்படி சந்தை மட்டும் மார்க்கெட் பகுதிகளில் அதிகமாக மக்கள் கூடாத வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் உதகையில் சாந்தி விஜயா மைதானம் மற்றும் பஸ் நிலையம் ஆகிய இடங்கள் காய்கறிகள் வழங்கும் கடைகளாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அதேபோல், மக்களின் நடமாட்டத்தை குறைக்க அரசு கூட்டுறவுத்துறை உழவர் சந்தை ஆய்வேட்டில் சார்பாக வாகனங்களில் காய்கறிகளை அந்தந்த இடங்களிலேயே கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனவும் பொதுமக்கள் அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவை மீறக்கூடாது என்றும் தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் மக்கள் நடமாடும் பகுதிகளில் கிருமிநாசினி தெறிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும், 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். தனியார் துறை சார்பில் 68 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கும் என்று தெரிவித்த அவர், நீலகிரி மாவட்டத்தில் 732 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர்கள் வெளியில் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ள ஏழு பேரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் கொராேனா தொற்று இல்லை என்றார். 

வெளிநாட்டிலிருந்து வந்த 147 பேர் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், 144 தடை உத்தரவை மீறியதாக 91 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...