மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை வாங்க வியாபாரிகள் வராததால் மொத்த காய்கறி ஏல மையம் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடல்!

கோவை: மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை வாங்க வியாபாரிகள் வராததால் மொத்த காய்கறி ஏல மையம் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை வாங்க வியாபாரிகள் வராததால் மொத்த காய்கறி ஏல மையம் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மொத்த காய்கறி ஏல மையமானது செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மற்றும் ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் கொண்டுவரப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. தினசரி 50 டன் காய்கறிக்கு மேல் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுப் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வந்தது

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரானோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு வாரமாக காய்கறிகளை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வந்ததால் ஏற்றுமதி படிப்படியாக குறைந்தது. 



இந்த நிலையில், தற்போது அது முற்றிலுமாக குறைந்து பல டன் காய்கறியானது தேக்கமடைந்தது. எனவே, அழுகும் பொருட்களை இருப்பு வைக்க முடியாது என்பதால் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மேட்டுப்பாளையம் காய்கறி மொத்த ஏல மையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....