கோவை: மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை வாங்க வியாபாரிகள் வராததால் மொத்த காய்கறி ஏல மையம் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை: மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை வாங்க வியாபாரிகள் வராததால் மொத்த காய்கறி ஏல மையம் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மொத்த காய்கறி ஏல மையமானது செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மற்றும் ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் கொண்டுவரப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. தினசரி 50 டன் காய்கறிக்கு மேல் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுப் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வந்தது
இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரானோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு வாரமாக காய்கறிகளை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வந்ததால் ஏற்றுமதி படிப்படியாக குறைந்தது.

இந்த நிலையில், தற்போது அது முற்றிலுமாக குறைந்து பல டன் காய்கறியானது தேக்கமடைந்தது. எனவே, அழுகும் பொருட்களை இருப்பு வைக்க முடியாது என்பதால் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மேட்டுப்பாளையம் காய்கறி மொத்த ஏல மையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மொத்த காய்கறி ஏல மையமானது செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மற்றும் ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் கொண்டுவரப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. தினசரி 50 டன் காய்கறிக்கு மேல் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுப் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வந்தது
இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரானோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு வாரமாக காய்கறிகளை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வந்ததால் ஏற்றுமதி படிப்படியாக குறைந்தது.

இந்த நிலையில், தற்போது அது முற்றிலுமாக குறைந்து பல டன் காய்கறியானது தேக்கமடைந்தது. எனவே, அழுகும் பொருட்களை இருப்பு வைக்க முடியாது என்பதால் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மேட்டுப்பாளையம் காய்கறி மொத்த ஏல மையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.