திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 83 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் மாவட்டத்தில் 41 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 83 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் மாவட்டத்தில் 41 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று இரண்டாவது நாள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மாநகர பகுதிகளில் 10 இடங்களிலும் புறநகர் பகுதிகளில் 31 இடங்களில் என மொத்தம் 41 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை கண்காணித்து வருகின்றனர்.
அதனடிப்படையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 83 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 26 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்பு ஏப்ரல் 17ம் தேதி பெற்றுக்கொள்ளுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று இரண்டாவது நாள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மாநகர பகுதிகளில் 10 இடங்களிலும் புறநகர் பகுதிகளில் 31 இடங்களில் என மொத்தம் 41 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை கண்காணித்து வருகின்றனர்.
அதனடிப்படையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 83 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 26 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்பு ஏப்ரல் 17ம் தேதி பெற்றுக்கொள்ளுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.