திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 83 பேர் மீது வழக்கு பதிவு..! 41 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு!

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 83 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் மாவட்டத்தில் 41 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 83 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் மாவட்டத்தில் 41 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். 



கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று இரண்டாவது நாள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மாநகர பகுதிகளில் 10 இடங்களிலும் புறநகர் பகுதிகளில் 31 இடங்களில் என மொத்தம் 41 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை கண்காணித்து வருகின்றனர். 

அதனடிப்படையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 83 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 26 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 



மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்பு ஏப்ரல் 17ம் தேதி பெற்றுக்கொள்ளுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...