கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களை எச்சரித்து வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களை எச்சரித்து வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கொரானா பரவலை தடுத்திட வேண்டி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளான பால், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், மருந்து கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடைகளில் கூட்டமாக மக்கள் நிற்காமல் 3 அடி தூரத்திற்கு ஒருவராக நின்று பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு கடைகள் முன் கோடுகள் வரையப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடி வந்தனர். மேலும் கடைகளில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டமாக பொருட்களை வாங்கி வந்தனர்.
இதனையடுத்து, வால்பாறை வட்டாட்சியர் ராஜன் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

அப்போது, சாலைகளில் இருசக்கர வாகனங்கள், கார்களில் சுற்றியவர்களை கண்டித்து திருப்பி அனுப்பினர். வீடுகளுக்கு வெளியே கூட்டமாக நின்றவர்களை வீட்டுக்குள் செல்ல அறிவுறுத்தினர். மேலும், காய்கறி கடைகளில் கூட்டமாக நின்றவர்களை அழைத்து அறிவுரை வழங்கியதோடு கடை உரிமையாளர்கள் விதிகளை கடைபிடிக்காவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர்.
கொரானா பரவலை தடுத்திட வேண்டி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளான பால், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், மருந்து கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடைகளில் கூட்டமாக மக்கள் நிற்காமல் 3 அடி தூரத்திற்கு ஒருவராக நின்று பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு கடைகள் முன் கோடுகள் வரையப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடி வந்தனர். மேலும் கடைகளில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டமாக பொருட்களை வாங்கி வந்தனர்.
இதனையடுத்து, வால்பாறை வட்டாட்சியர் ராஜன் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

அப்போது, சாலைகளில் இருசக்கர வாகனங்கள், கார்களில் சுற்றியவர்களை கண்டித்து திருப்பி அனுப்பினர். வீடுகளுக்கு வெளியே கூட்டமாக நின்றவர்களை வீட்டுக்குள் செல்ல அறிவுறுத்தினர். மேலும், காய்கறி கடைகளில் கூட்டமாக நின்றவர்களை அழைத்து அறிவுரை வழங்கியதோடு கடை உரிமையாளர்கள் விதிகளை கடைபிடிக்காவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர்.