வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களை எச்சரித்து காவல்துறையினர் கொடி அணிவகுப்பு!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களை எச்சரித்து வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களை எச்சரித்து வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். 

கொரானா பரவலை தடுத்திட வேண்டி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளான பால், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், மருந்து கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 



மேலும், கடைகளில் கூட்டமாக மக்கள் நிற்காமல் 3 அடி தூரத்திற்கு ஒருவராக நின்று பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு கடைகள் முன் கோடுகள் வரையப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடி வந்தனர். மேலும் கடைகளில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டமாக பொருட்களை வாங்கி வந்தனர். 

இதனையடுத்து, வால்பாறை வட்டாட்சியர் ராஜன் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். 



அப்போது, சாலைகளில் இருசக்கர வாகனங்கள், கார்களில் சுற்றியவர்களை கண்டித்து திருப்பி அனுப்பினர். வீடுகளுக்கு வெளியே கூட்டமாக நின்றவர்களை வீட்டுக்குள் செல்ல அறிவுறுத்தினர். மேலும், காய்கறி கடைகளில் கூட்டமாக நின்றவர்களை அழைத்து அறிவுரை வழங்கியதோடு கடை உரிமையாளர்கள் விதிகளை கடைபிடிக்காவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...