திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் வந்த வாகன ஓட்டிகளுக்கு திருப்பூர் காவல்துறையினர் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கினர்.
திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் வந்த வாகன ஓட்டிகளுக்கு திருப்பூர் காவல்துறையினர் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கினர்.
கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் திருப்பூரில் அத்தியாவசிய தேவைகள் தவிர அநாவசிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன ஓட்டிகளை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் அநாவசியமாய் வந்த வாகன ஓட்டிகளை பிடித்த காவல்துறையினர் அவர்களை நாற்காலி போல அமரவைத்து நூதன தண்டனை வழங்கினர்.

அதேபோல், பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்திலும் வாகனத்தில் வந்த இருவரை போலீசார் தாக்குகின்ற காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் திருப்பூரில் அத்தியாவசிய தேவைகள் தவிர அநாவசிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன ஓட்டிகளை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் அநாவசியமாய் வந்த வாகன ஓட்டிகளை பிடித்த காவல்துறையினர் அவர்களை நாற்காலி போல அமரவைத்து நூதன தண்டனை வழங்கினர்.

அதேபோல், பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்திலும் வாகனத்தில் வந்த இருவரை போலீசார் தாக்குகின்ற காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.