ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 



நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய வாழ்க்கை பாதிக்காதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் , வெளிநாட்டிலிருந்து வந்த 172 பேர் வீட்டுக்கண்கானிப்பபில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், கொரோனா தடுப்பிற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டு 0421-1077 , 29711199 இலவச எண்ணை அறிவித்துள்ளனர். திருப்பூரில் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாஸ்க் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக கூறினார். 

மேலும், திருப்பூர் மாநகராட்சியில் 10 இடங்களிலும், புறநகரில் 31 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விசாரனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாகவும், சாலைகளில் அத்திவாசிய பணிதவிர அநாவசியமாய் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....