ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 



நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய வாழ்க்கை பாதிக்காதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் , வெளிநாட்டிலிருந்து வந்த 172 பேர் வீட்டுக்கண்கானிப்பபில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், கொரோனா தடுப்பிற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டு 0421-1077 , 29711199 இலவச எண்ணை அறிவித்துள்ளனர். திருப்பூரில் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாஸ்க் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக கூறினார். 

மேலும், திருப்பூர் மாநகராட்சியில் 10 இடங்களிலும், புறநகரில் 31 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விசாரனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாகவும், சாலைகளில் அத்திவாசிய பணிதவிர அநாவசியமாய் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...