திருப்பூர்: திருப்பூரில் உள்ள வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் உள்ள வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
திருப்பூர் ஆலங்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் அமலராஜ் (52). இந்த வேஸ்ட் குடோனில், டையிங் நிறுவனங்களில் இருந்து சேகரித்து வரப்படும் பிளாஸ்டிக் கேன்கள் குடோனில் ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது மேலும், பிளாஸ்டிக் வேஸ்டுகள், இரும்பு பொருட்கள் இருந்துள்ளது.
இந்நிலையில், குடோனில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் 6 மணிக்கு மேல் குடோனை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் குடோனில் இருந்து புகைமூட்டம் வருவதைக் கண்ட அப்பகுதியினர் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீயானது மளமளவென கொழுந்து விட்டு எரிய துவங்கியது. இந்த புகைமூட்டமானது இரண்டு கிலோமீட்டர் வரை சென்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்களுடன் இணைந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். கெமிக்கல் நிறுவனங்களிலிருந்து எடுத்து வரப்படும் கேன்களில் ஒரு சிலவற்றில், ரசாயனங்கள் தேங்கியிருந்ததாலேயே தீயானது உடனடியாக கொழுந்து விட்டு எரியத் துவங்கியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மர்ம நபர்கள் யாரேனும் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் ஆலங்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் அமலராஜ் (52). இந்த வேஸ்ட் குடோனில், டையிங் நிறுவனங்களில் இருந்து சேகரித்து வரப்படும் பிளாஸ்டிக் கேன்கள் குடோனில் ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது மேலும், பிளாஸ்டிக் வேஸ்டுகள், இரும்பு பொருட்கள் இருந்துள்ளது.
இந்நிலையில், குடோனில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் 6 மணிக்கு மேல் குடோனை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் குடோனில் இருந்து புகைமூட்டம் வருவதைக் கண்ட அப்பகுதியினர் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீயானது மளமளவென கொழுந்து விட்டு எரிய துவங்கியது. இந்த புகைமூட்டமானது இரண்டு கிலோமீட்டர் வரை சென்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்களுடன் இணைந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். கெமிக்கல் நிறுவனங்களிலிருந்து எடுத்து வரப்படும் கேன்களில் ஒரு சிலவற்றில், ரசாயனங்கள் தேங்கியிருந்ததாலேயே தீயானது உடனடியாக கொழுந்து விட்டு எரியத் துவங்கியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மர்ம நபர்கள் யாரேனும் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.