கோவையில் 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள் - அறிவுரை கூறி திருப்பி அனுப்பிய போலீசார்!

கோவை: இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானதையடுத்து கோவையின் முக்கிய சாலைகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில், சாலையில் தேவையின்றி பயணிக்கும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.


கோவை: இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானதையடுத்து கோவையின் முக்கிய சாலைகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில், சாலையில் தேவையின்றி பயணிக்கும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், நேற்று பாரத பிரதமர் வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து, கோவையில் உள்ள முக்கிய சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டது. குறிப்பாக உக்கடம், டவுன்ஹால், காந்திபுரம் 100 அடி சாலை, பந்தய சாலை, சிங்காநல்லூர் போன்ற முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகள் பேரிகார்டுகள் மூலம் அடைக்கப்பட்டது.



இந்த நிலையில், இன்று காலை அத்தியாவசிய தேவைகள் என்று சாலைகளில் நடமாடிய பொதுமக்களை போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். மேலும், அவசர தேவைகளின்றி சாலைகளில் பயணம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....