கோவை: கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கூட்டத்தை குறைக்கும் பொருட்டு கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளில் 153 பேர் ஜாமினில் விடப்பட்டுள்ளனர்.
கோவை: கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கூட்டத்தை குறைக்கும் பொருட்டு கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளில் 153 பேர் ஜாமினில் விடப்பட்டுள்ளனர்.

கோவை மத்திய சிறையில் பெண்கள் ஆண்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழக அரசின் உத்தரவின்படி சிறைத்துறை நிர்வாகம் 5 பெண் கைதிகள் உட்பட 153 கைதிகளை ஜாமீனில் விடுவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையானது கூட்டத்தை குறைக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, இனி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.
இது குறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கூறும்போது;-
இந்த வைரஸ் பாதிப்பு நிமித்தம் கைதிகள் பிணையில் விடப்பட்டு வருகின்றனர். அதேபோல, சிறையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ வசதிகளுடன் தூய்மை குறித்து கைதிகளுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கைதிகள் தாங்கள் அணிந்து கொள்வதற்காகவும் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கவும் முக கவசங்களை தயாரித்து வருவதாக தெரிவித்தார்.

கோவை மத்திய சிறையில் பெண்கள் ஆண்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழக அரசின் உத்தரவின்படி சிறைத்துறை நிர்வாகம் 5 பெண் கைதிகள் உட்பட 153 கைதிகளை ஜாமீனில் விடுவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையானது கூட்டத்தை குறைக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, இனி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.
இது குறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கூறும்போது;-
இந்த வைரஸ் பாதிப்பு நிமித்தம் கைதிகள் பிணையில் விடப்பட்டு வருகின்றனர். அதேபோல, சிறையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ வசதிகளுடன் தூய்மை குறித்து கைதிகளுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கைதிகள் தாங்கள் அணிந்து கொள்வதற்காகவும் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கவும் முக கவசங்களை தயாரித்து வருவதாக தெரிவித்தார்.