கோவை: வால்பாறையில் கொரானா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ், சுகாதார ஆய்வாளர் ஜான்சன், வட்டாட்சியர் ராஜன் வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: வால்பாறையில் கொரானா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ், சுகாதார ஆய்வாளர் ஜான்சன், வட்டாட்சியர் ராஜன் வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் பொதுமக்களுக்கு அடிக்கடி கை கழுவும் முறையை செய்முறையாக செய்து காட்டினர்.
தொடர்ந்து, கொரானா வைரஸ் தொற்று பற்றிய விவரங்களை மக்களுக்கு எடுத்துரைத்தனர். பேருந்து நிலையம் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர், மருத்துவர்கள் நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவத்துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோர் வழங்கினர்.

மேலும், காந்தி சிலை பேருந்து நிலையம், ஸடான்மோர் சந்திப்பு, தபால் நிலையம், புதிய பேருந்து நிலையம், அட்டகட்டி சோதனைச் சாவடி, மழுக்கப்பாறை சோதனைச்சாவடிகளுக்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இன்று மாலை 6 மணி முதல் கடைபிடிக்க வேண்டிய 144 தடை உத்தரவை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டி வாகனம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் பொதுமக்களுக்கு அடிக்கடி கை கழுவும் முறையை செய்முறையாக செய்து காட்டினர்.
தொடர்ந்து, கொரானா வைரஸ் தொற்று பற்றிய விவரங்களை மக்களுக்கு எடுத்துரைத்தனர். பேருந்து நிலையம் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர், மருத்துவர்கள் நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவத்துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோர் வழங்கினர்.

மேலும், காந்தி சிலை பேருந்து நிலையம், ஸடான்மோர் சந்திப்பு, தபால் நிலையம், புதிய பேருந்து நிலையம், அட்டகட்டி சோதனைச் சாவடி, மழுக்கப்பாறை சோதனைச்சாவடிகளுக்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இன்று மாலை 6 மணி முதல் கடைபிடிக்க வேண்டிய 144 தடை உத்தரவை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டி வாகனம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.