கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து சொந்த ஊருக்கு சென்று வந்த வடமாநில தொழலாளர்களை கொரோனா அச்சத்தின் காரணமாக தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து சொந்த ஊருக்கு சென்று வந்த வடமாநில தொழலாளர்களை கொரோனா அச்சத்தின் காரணமாக தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத்தில் அஸ்ஸாம் ஜார்கன்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் சில மாதங்கள் இங்கு பணி புரிந்து விட்டு பின்னர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று சில மாதங்கள் தங்கிவிட்டு மீண்டும் திரும்பி வருகின்றனர், இப்படி இவர்கள் அடிக்கடி இடம் பெயர்ந்து வருவதால் கொரானா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.
எனவே இதனை தடுக்கும் விதமாக, வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்க்ஷ்மன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இன்று ஷேக்கல் முடி எஸ்டேட்டில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்ளை சந்தித்து கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதனை தொடர்ந்து வட மாநிலங்களிலிருந்து தற்போது வந்தவர்கள் தனிமை படுத்தி வீட்டிலேயே இருக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். இதோடு தேயிலை தோட்ட மருத்துவத்துறையினர் அவர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் கேரள எல்லையிலுள்ள மழுக்கப்பாறை சோதனைச்சசாவடி மற்றும் அட்டக்கட்டி சோதனைச்சாவடியில் கிருமி நாசினி அடிக்கும் பணியை பார்வையிட்டு அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி கட்டாயம் அடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத்தில் அஸ்ஸாம் ஜார்கன்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் சில மாதங்கள் இங்கு பணி புரிந்து விட்டு பின்னர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று சில மாதங்கள் தங்கிவிட்டு மீண்டும் திரும்பி வருகின்றனர், இப்படி இவர்கள் அடிக்கடி இடம் பெயர்ந்து வருவதால் கொரானா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.
எனவே இதனை தடுக்கும் விதமாக, வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்க்ஷ்மன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இன்று ஷேக்கல் முடி எஸ்டேட்டில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்ளை சந்தித்து கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதனை தொடர்ந்து வட மாநிலங்களிலிருந்து தற்போது வந்தவர்கள் தனிமை படுத்தி வீட்டிலேயே இருக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். இதோடு தேயிலை தோட்ட மருத்துவத்துறையினர் அவர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் கேரள எல்லையிலுள்ள மழுக்கப்பாறை சோதனைச்சசாவடி மற்றும் அட்டக்கட்டி சோதனைச்சாவடியில் கிருமி நாசினி அடிக்கும் பணியை பார்வையிட்டு அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி கட்டாயம் அடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.