கொரோனா அச்சம்: வால்பாறையில் இடம் பெயரும் வடமாநில தொழிலாளர்களை தனிமைப்படுத்த ஆலோசனை

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து சொந்த ஊருக்கு சென்று வந்த வடமாநில தொழலாளர்களை கொரோனா அச்சத்தின் காரணமாக தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து சொந்த ஊருக்கு சென்று வந்த வடமாநில தொழலாளர்களை கொரோனா அச்சத்தின் காரணமாக தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத்தில் அஸ்ஸாம் ஜார்கன்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் சில மாதங்கள் இங்கு பணி புரிந்து விட்டு பின்னர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று சில மாதங்கள் தங்கிவிட்டு மீண்டும் திரும்பி வருகின்றனர், இப்படி இவர்கள் அடிக்கடி இடம் பெயர்ந்து வருவதால் கொரானா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.

எனவே இதனை தடுக்கும் விதமாக, வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்க்ஷ்மன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இன்று ஷேக்கல் முடி எஸ்டேட்டில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்ளை சந்தித்து கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இதனை தொடர்ந்து வட மாநிலங்களிலிருந்து தற்போது வந்தவர்கள் தனிமை படுத்தி வீட்டிலேயே இருக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். இதோடு தேயிலை தோட்ட மருத்துவத்துறையினர் அவர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.



மேலும் கேரள எல்லையிலுள்ள மழுக்கப்பாறை சோதனைச்சசாவடி மற்றும் அட்டக்கட்டி சோதனைச்சாவடியில் கிருமி நாசினி அடிக்கும் பணியை பார்வையிட்டு அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி கட்டாயம் அடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...