கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷ்ரவன்குமார ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷ்ரவன்குமார ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-
கோவை மாநகராட்சியில் கொரோனா நோய் வைரஸ் தடுப்பு பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், கிருமி நாசினி மருந்துகள், ஸ்பேரேயர்கள், மருந்து தெளிப்பான்கள் ஆகியவை போதியளவில் இருப்பு வைத்து வழங்கிட தகுந்த ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
வீடு வீடாகச் சென்று கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வெளியிடும் பணிகளையும், கை கழுவுதல் குறித்து விழிப்புணாவு செயல்முறை விளக்கத்தையும் பொதுமக்களிடையே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து மண்டலங்களிலும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக நடைபெற தகுந்த முன்னேற்பாடு பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும், வீடுகள், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் பொதுமக்களிடையே விழிப்புணாவு ஏற்படுத்தும் பணிகளை தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-
கோவை மாநகராட்சியில் கொரோனா நோய் வைரஸ் தடுப்பு பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், கிருமி நாசினி மருந்துகள், ஸ்பேரேயர்கள், மருந்து தெளிப்பான்கள் ஆகியவை போதியளவில் இருப்பு வைத்து வழங்கிட தகுந்த ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
வீடு வீடாகச் சென்று கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வெளியிடும் பணிகளையும், கை கழுவுதல் குறித்து விழிப்புணாவு செயல்முறை விளக்கத்தையும் பொதுமக்களிடையே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து மண்டலங்களிலும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக நடைபெற தகுந்த முன்னேற்பாடு பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும், வீடுகள், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் பொதுமக்களிடையே விழிப்புணாவு ஏற்படுத்தும் பணிகளை தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.