கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகளை தூய்மைப்‌ பணியாளர்கள்‌ அர்ப்பணிப்புடன்‌ மேற்கொள்ள வேண்டும்‌ - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்கள்‌.

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள் தெரிவித்ததாவது:-

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா நோய்‌ வைரஸ்‌ தடுப்பு பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌ விழிப்புடன்‌ கண்காணிக்க வேண்டும்‌. தூய்மைப்‌ பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள்‌, கிருமி நாசினி மருந்துகள்‌, ஸ்பேரேயர்கள்‌, மருந்து தெளிப்பான்கள்‌ ஆகியவை போதியளவில்‌ இருப்பு வைத்து வழங்கிட தகுந்த ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள்‌, சுகாதார அலுவலர்கள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

வீடு வீடாகச்‌ சென்று கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள்‌ வெளியிடும்‌ பணிகளையும்‌, கை கழுவுதல்‌ குறித்து விழிப்புணாவு செயல்முறை விளக்கத்தையும்‌ பொதுமக்களிடையே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்‌. அனைத்து மண்டலங்களிலும்‌ பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம்‌ சீராக நடைபெற தகுந்த முன்னேற்பாடு பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

காய்ச்சல்‌, சளி, இருமல்‌ அறிகுறி இருந்தால்‌ அரசு மருத்துவமனைகள்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும்‌, வீடுகள்‌, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்‌ கொள்ளவும்‌ பொதுமக்களிடையே விழிப்புணாவு ஏற்படுத்தும்‌ பணிகளை தூய்மைப்‌ பணியாளர்கள்‌ தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்‌.

மேலும்‌, மாநகராட்சியால்‌ மேற்கொள்ளப்படும்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொதுமக்கள்‌ ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...