கோவை: கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவே கோவையில் உறுதி செய்யப்பட்ட முதல் கொரோனா பாதிப்பாகும். இதையடுத்து, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும் அவர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்ணின் உறவினர்களின் ரத்த மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த வாரம் ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவே கோவையில் உறுதி செய்யப்பட்ட முதல் கொரோனா பாதிப்பாகும். இதையடுத்து, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும் அவர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்ணின் உறவினர்களின் ரத்த மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.