திருப்பூர் அருகே இரண்டாக வெட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் - பிரேதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் அருகே இரண்டாக வெட்டப்பட்டு எரிந்த நிலையில் இளம் பெண் சடலமாக மீட்ட போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே இரண்டாக வெட்டப்பட்டு எரிந்த நிலையில் இளம் பெண் சடலமாக மீட்ட போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்குட்பட்ட கரைப்புதூர் பகுதியில் இன்று காலை சாலையோரத்தில் தீ எரிந்து கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைத்த போது அங்கே பெண் எரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்ததை அடுத்து போலீசார் வந்து பார்த்தபோது, பெண் சடலம் இரண்டாக வெட்டப்பட்ட நிலையில் எரியூட்டப்பட்டது தெரியவந்தது. 



உடனடியாக கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் டெவில் ஆகியவை கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உடல் முழுவதுமாக எரிக்கப்பட்டதால் அடையாளம் தெரியாத நிலையில், முதற்கட்ட பிரேத பரிசோதனை விசாரணையில் 26 வயதுடைய இளம் பெண்ணாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் இறந்த பெண் யார்? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...