திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஒரு மாத காலத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தங்களது பயண விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஒரு மாத காலத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தங்களது பயண விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-
திருப்பூரில் கடந்த ஒரு மாத காலத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தங்களது பயண விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், ஏற்கனவே சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதில் விடுபட்டவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக 0421-2971199 , 0421-1077 என்ற எண்களுக்கு தொடர்புகொண்டு விவரத்தை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.