கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் சேவையில் ஈடுபட்டவர்களை கைதட்டியும் ஒலி எழுப்பி நன்றி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் சேவையில் ஈடுபட்டவர்களை கைதட்டியும் ஒலி எழுப்பி நன்றி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
கொரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 14 மணி நேர சுய ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுய ஊரடங்கு இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில் இரவு 09.00 மணி வரை கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை காலை 5 மணி வரை கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து உள்ளனர். தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்கள், பேருந்துகள், லாரிகள், கால் டாக்ஸி, ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. கோவையில் சுய ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் அனைவரும் இன்று மாலை 05.00 மணிக்கு வீட்டின் நுழைவு வாயிலில் நின்று கைதட்டல் மூலமோ, மணியோசை எழுப்பியோ நன்றியை வெளிப்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், கோவை சுக்ரவார்பேட்ட்டை பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வீட்டின் முன்பும் மொட்டை மாடியில் நின்று கைதட்டியும், ஒலி எழுப்பி தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும், குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அவ்வழியே சென்ற காவல்துறை வாகனத்திற்கும், 108 ஆம்புலனஸ் வாகனத்திற்கும் சல்யூட் அடித்து நன்றி தெரிவித்தனர்.