கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியாளர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவித்த பொதுமக்கள்..!

கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் சேவையில் ஈடுபட்டவர்களை கைதட்டியும் ஒலி எழுப்பி நன்றி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் சேவையில் ஈடுபட்டவர்களை கைதட்டியும் ஒலி எழுப்பி நன்றி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

கொரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 14 மணி நேர சுய ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுய ஊரடங்கு இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில் இரவு 09.00 மணி வரை கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை காலை 5 மணி வரை கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.



பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து உள்ளனர். தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்கள், பேருந்துகள், லாரிகள், கால் டாக்ஸி, ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. கோவையில் சுய ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.



இந்த நிலையில், கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் அனைவரும் இன்று மாலை 05.00 மணிக்கு வீட்டின் நுழைவு வாயிலில் நின்று கைதட்டல் மூலமோ, மணியோசை எழுப்பியோ நன்றியை வெளிப்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், கோவை சுக்ரவார்பேட்ட்டை பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வீட்டின் முன்பும் மொட்டை மாடியில் நின்று கைதட்டியும், ஒலி எழுப்பி தங்களது நன்றிகளை தெரிவித்தனர். 



மேலும், குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அவ்வழியே சென்ற காவல்துறை வாகனத்திற்கும், 108 ஆம்புலனஸ் வாகனத்திற்கும் சல்யூட் அடித்து நன்றி தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...