சுய ஊரடங்கு உத்தரவு: திருப்பூர் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ரயில் பயணிகள், ஆதரவற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு உணவு விநியோகம்!

திருப்பூர்: திருப்பூர் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ரயில் பயணிகள், ஆதரவற்றோர் என 300க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கினர்.

திருப்பூர்: திருப்பூர் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ரயில் பயணிகள், ஆதரவற்றோர் என 300க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கினர்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், வணிக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட்டிலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.



இந்நிலையில், ஹோட்டல் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், திருப்பூர் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் பகுதிகளில் இருந்த வட மாநிலத்தவர்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று உணவு வழங்கினர்.



சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று 300க்கும் மேற்பட்டோருக்கு உணவுகளை விநியோகம் செய்தனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...