சுய ஊரடங்கு உத்தரவு: திருப்பூர் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ரயில் பயணிகள், ஆதரவற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு உணவு விநியோகம்!

திருப்பூர்: திருப்பூர் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ரயில் பயணிகள், ஆதரவற்றோர் என 300க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கினர்.

திருப்பூர்: திருப்பூர் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ரயில் பயணிகள், ஆதரவற்றோர் என 300க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கினர்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், வணிக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட்டிலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.



இந்நிலையில், ஹோட்டல் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், திருப்பூர் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் பகுதிகளில் இருந்த வட மாநிலத்தவர்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று உணவு வழங்கினர்.



சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று 300க்கும் மேற்பட்டோருக்கு உணவுகளை விநியோகம் செய்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...