கோவை: மக்கள் ஊரடங்கால் உணவு வசதிகள் இன்றி தவித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சாலையில் சென்று கொண்டிருந்த கோவை மாவட்ட ஆட்சியர் திடீரென வாகனத்தை நிறுத்தி உணவு ஏற்பாடுகள் செய்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: மக்கள் ஊரடங்கால் உணவு வசதிகள் இன்றி தவித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சாலையில் சென்று கொண்டிருந்த கோவை மாவட்ட ஆட்சியர் திடீரென வாகனத்தை நிறுத்தி உணவு ஏற்பாடுகள் செய்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கோவையில் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நலன்களை தாமாக முன்வந்து செய்து வருகிறார். அதேபோல, ஏழை எளியவர்கள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள் என அவரின் கவனம் மற்ற ஆட்சியர்களை விட மேலோங்கி நிற்பதாக பொதுமக்கள் மத்தியில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் ஊரடங்கு உத்தரவால் ஆதரவற்றவர்கள், மற்றும் வடமாநில பயணிகள் உணவு வசதிகள் இன்றியும் தண்ணீர் இன்றியும் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தனது பணி நிமித்தம் காரணமாக கோவை ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் தனது வாகனத்தை நிறுத்தி செய்தியாளர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்தார்.

பிறகு, அவர்களுக்கு தனது அலுவலகத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வர உத்தரவிட்டார்.

மேலும், சில நல் உள்ளங்களின் உதவியோடு அவர்களுக்கு உணவும் ஏற்பாடும் செய்யப்பட்டது. முக்கியமாக, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாநகராட்சி மண்டபம் மற்றும் சி.எஸ்.ஐ மண்டபங்களில் இன்று இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்தும் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கோவையில் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நலன்களை தாமாக முன்வந்து செய்து வருகிறார். அதேபோல, ஏழை எளியவர்கள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள் என அவரின் கவனம் மற்ற ஆட்சியர்களை விட மேலோங்கி நிற்பதாக பொதுமக்கள் மத்தியில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் ஊரடங்கு உத்தரவால் ஆதரவற்றவர்கள், மற்றும் வடமாநில பயணிகள் உணவு வசதிகள் இன்றியும் தண்ணீர் இன்றியும் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தனது பணி நிமித்தம் காரணமாக கோவை ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் தனது வாகனத்தை நிறுத்தி செய்தியாளர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்தார்.

பிறகு, அவர்களுக்கு தனது அலுவலகத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வர உத்தரவிட்டார்.

மேலும், சில நல் உள்ளங்களின் உதவியோடு அவர்களுக்கு உணவும் ஏற்பாடும் செய்யப்பட்டது. முக்கியமாக, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாநகராட்சி மண்டபம் மற்றும் சி.எஸ்.ஐ மண்டபங்களில் இன்று இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்தும் உத்தரவிட்டார்.