கோவை: சுதந்திர மீட்டர் அனைத்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் "சுகந்திர மீட்டர்" ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.
கோவை: சுதந்திர மீட்டர் அனைத்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் "சுகந்திர மீட்டர்" ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 200க்கும் மேற்பட்ட மீட்டர் ஆட்டோக்களை இயக்கிவரும் இந்த அமைப்பினர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உப்பு, மஞ்சள், வேப்பிலைகளை அரைத்து தண்ணீரில் கலந்த கிருமி நாசினிகளை சாலைகளில் தெளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:-

200 லிட்டர் கொண்ட 4 கேன்களில் 800 லிட்டர் கிருமி நாசினிகளை இன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களான காந்திபுரம் பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெளித்து வந்துள்ளதாக தெரிவித்தனர்.
கிருமி நாசினி தெளிக்கும் பணியில் 24 பேர் ஈடுபட்டதகவும் காலை 9 மணிக்கு துவங்கி தற்போது வரை இதனை செய்து வருவதாக தெரிவித்தனர். இதற்கு கோவையில் உள்ள மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள், கல்லுப்பு ஆகியவைகளை இலவசமாக வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் வைரஸின் தாக்கம் குறையும் வரை தொடர்ந்து இந்தப் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.