மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் கோவை வந்த 10 இளைஞர்களுக்கு காய்ச்சல்; பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

கோவை: ரயில் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து கோவை வந்த 10 இளைஞர்கள் கொரோனா அறிகுறியுடன் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.


கோவை: ரயில் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து கோவை வந்த 10 இளைஞர்கள் கொரோனா அறிகுறியுடன் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

மகாராஷ்டிராவில் இருந்து கோவை வந்திறங்கிய 10 இளைஞர்களுக்கு ரயில் நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் எழுந்த சந்தேகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

கோவை ரயில் நிலையத்திற்கு தினமும் 70ற்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதில் சாதாரண நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பயணிகளும் சனி, ஞாயிறு மற்றும் விழா நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் வருகின்றனர்.

இதனிடையே, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கோவை ரயில் நிலையத்தில் வரும் பயணிகளுக்கு வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என்பது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை ரயில்வே நிலையத்தில் கொரோனா கண்காணிப்பை சுகாதாரத் துறையினரும் மருத்துவ குழுவினரும் ரயில்வே போலீசாரும் இணைந்து செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று பெங்களூர்-எர்ணாகுளம் இரயிலில் கோவை வந்த 10 மஹாராஷ்டிரா இளைஞர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இந்தப் பரிசோதனையில் எழுந்த சந்தேகத்தில் மருத்துவ குழுவினர் மகாராஷ்டிரா இளைஞர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர்.

கோவை ரயில் நிலையத்தில் பிரத்தியேக ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அவசர நிலையில் வரும் பயணிகளை காலதாமதமாக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய சூழல் உள்ளதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...