உதகையில் கிருமி நாசினி, முக கவசம். உள்ளிட்ட மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்ற மருந்து கடைக்கு சீல்

நீலகிரி: உதகையில் கிருமி நாசினி, முக கவசம். உள்ளிட்ட மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்ற பிரபல மருந்து கடைக்கு மருந்து கட்டுப்பாட்டு துறையினர் இரவுநேரத்தில் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.

நீலகிரி: உதகையில் கிருமி நாசினி, முக கவசம். உள்ளிட்ட மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்ற பிரபல மருந்து கடைக்கு மருந்து கட்டுப்பாட்டு துறையினர் இரவுநேரத்தில் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். 

நாடு முழுவதம் கொரோனா தொற்று பரவமால் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் கொரோனா வைரஸ் அச்சத்தை போக்கும் வகையில், பரவாமல் இருக்கும் வகையிலும் தேவையான முன்னெச்சரிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். 

எனவே, பொதுமக்கள் சுகாதாரம் பேணி காக்க மாஸ்க், சானிட்டைசர், சானிட்டரி ஹேண்ட் வாஸ் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வாங்க, மருந்து கடைக்கு செல்வது அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், உதகையில் பல கிளைகள் கொண்ட மேசியா மருந்தகம் மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் மருந்து கட்டுப்பாட்டு துறையினர் சம்மந்தப்பட்ட மருந்து கடையில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர். 



இதையடுத்து, மருந்து கட்டுப் பாட்டு துறை கோவை மண்டல அதிகாரி உத்தரவின் பேரில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில், உதகை அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் பழனிசாமி, துணை இயக்குனர் பாலுசாமி, இருப்பிட மருத்துவர் பொன்ராஜராஜன் ஆகியோர் மருந்து கடையை மூடி நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இவர்கள் 7 நாட்களுக்கு கடை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதே போல் நாளை முதல் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...