கொரோனா எதிரொலி கோவை மீன் மார்க்கெட் 22 ஆம் தேதி முழு அடைப்பு; 3 கோடி வர்த்தகம் பாதிப்பு!

கோவை: கொரோனா எதிரொலியால் கோவை மாவட்டம் முழுவதும் வணிக வளாகங்கள், மால்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவை: கொரோனா எதிரொலியால் கோவை மாவட்டம் முழுவதும் வணிக வளாகங்கள், மால்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், கோவையில் ஞாயிற்றுக்கிழமை எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட் கொரோனா எதிரொலியால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, கோவை மொத்த மீன் மார்க்கெட் சங்க பொதுச்செயலாளர் எஸ்ஏ. காதர் இதுதொடர்பாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

மொத்த மீன் மார்க்கெட்டின் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தின் தீர்மானத்தின்படி, கொரோனா எதிரொலியாக வரும் 22 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை முக்கியமான நாளாக இருந்தாலும், அரசின் வேண்டுகோளுக்கு இணங்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன் வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், முக கவசங்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், மீனின் தேவைகள் அதிகளவில் உள்ள நிலையில் வரத்து குறைவாக உள்ளது என்றார்.

மேலும், முன்னெச்ரிக்கை நடவடிக்கையாக மார்க்கெட் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாக வைத்துள்ளோம். அன்று ஒருநாள் மட்டும் 3 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும்.

இரசாயன கலவைகள் இந்த மீன் மார்க்கெட்டில் கலப்பது இல்லை. மீன் வளத்துறையுடன் இணைந்து கட்டுப்பாடோடு இந்த மீன் மார்க்கெட் செயல்படுவதாக, கூறினார். 

எந்த நோய் பரவினாலும், மீன் மருத்துவ குணம் கொண்டது, எனவே மீன்களை சாப்பிட வேண்டாம் என யாரும் கூறுவதில்லை என்றார்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...