கொரோனா எதிரொலி கோவை மீன் மார்க்கெட் 22 ஆம் தேதி முழு அடைப்பு; 3 கோடி வர்த்தகம் பாதிப்பு!

கோவை: கொரோனா எதிரொலியால் கோவை மாவட்டம் முழுவதும் வணிக வளாகங்கள், மால்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவை: கொரோனா எதிரொலியால் கோவை மாவட்டம் முழுவதும் வணிக வளாகங்கள், மால்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், கோவையில் ஞாயிற்றுக்கிழமை எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட் கொரோனா எதிரொலியால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, கோவை மொத்த மீன் மார்க்கெட் சங்க பொதுச்செயலாளர் எஸ்ஏ. காதர் இதுதொடர்பாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

மொத்த மீன் மார்க்கெட்டின் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தின் தீர்மானத்தின்படி, கொரோனா எதிரொலியாக வரும் 22 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை முக்கியமான நாளாக இருந்தாலும், அரசின் வேண்டுகோளுக்கு இணங்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன் வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், முக கவசங்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், மீனின் தேவைகள் அதிகளவில் உள்ள நிலையில் வரத்து குறைவாக உள்ளது என்றார்.

மேலும், முன்னெச்ரிக்கை நடவடிக்கையாக மார்க்கெட் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாக வைத்துள்ளோம். அன்று ஒருநாள் மட்டும் 3 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும்.

இரசாயன கலவைகள் இந்த மீன் மார்க்கெட்டில் கலப்பது இல்லை. மீன் வளத்துறையுடன் இணைந்து கட்டுப்பாடோடு இந்த மீன் மார்க்கெட் செயல்படுவதாக, கூறினார். 

எந்த நோய் பரவினாலும், மீன் மருத்துவ குணம் கொண்டது, எனவே மீன்களை சாப்பிட வேண்டாம் என யாரும் கூறுவதில்லை என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...