வால்பாறையில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் ஸ்டான்மோர் புதிய பாலம் அமைக்கும் பணி துவக்கம்!

கோவை: வால்பாறையில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் ஸ்டான்மோர் புதிய பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.

கோவை: வால்பாறையில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் ஸ்டான்மோர் புதிய பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து சோலையார் அணை செல்லும் சாலையில் ஸடான்மோர் எஸ்டேட்டில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான குறுகிய பாலம் உள்ளது. இந்த சாலையை வால்பாறையிலிருந்து சோலையார் அணை வரை விரிவாக்கம் செய்யும் பணி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்டான்மோர் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய அகலமான பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்தது. மாற்றுப்பாதை அமைத்து விட்டு பழைய பாலத்தை இடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.



இந்த நிலையில், தேயிலைத் தோட்டத்தின் சாலையில் ஒரு பகுதியில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு பழைய பாலம் இடிக்கும் பணி துவங்கியது. குரங்குமுடி, ஷேக்கல்முடி, வில்லோனி மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் கனரக வாகனங்கள் ரொட்டிக்கடை வழியாக செல்கிறது. இந்த புதிய பாலம் கட்டும் பணிகள் 40 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...