வால்பாறையில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் ஸ்டான்மோர் புதிய பாலம் அமைக்கும் பணி துவக்கம்!

கோவை: வால்பாறையில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் ஸ்டான்மோர் புதிய பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.

கோவை: வால்பாறையில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் ஸ்டான்மோர் புதிய பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து சோலையார் அணை செல்லும் சாலையில் ஸடான்மோர் எஸ்டேட்டில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான குறுகிய பாலம் உள்ளது. இந்த சாலையை வால்பாறையிலிருந்து சோலையார் அணை வரை விரிவாக்கம் செய்யும் பணி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்டான்மோர் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய அகலமான பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்தது. மாற்றுப்பாதை அமைத்து விட்டு பழைய பாலத்தை இடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.



இந்த நிலையில், தேயிலைத் தோட்டத்தின் சாலையில் ஒரு பகுதியில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு பழைய பாலம் இடிக்கும் பணி துவங்கியது. குரங்குமுடி, ஷேக்கல்முடி, வில்லோனி மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் கனரக வாகனங்கள் ரொட்டிக்கடை வழியாக செல்கிறது. இந்த புதிய பாலம் கட்டும் பணிகள் 40 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...