குழந்தையை கணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறி உதகை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

நீலகிரி: பெண் குழந்தையை கணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறி உதகை ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று குழந்தைகளுடன் பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி: பெண் குழந்தையை கணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறி உதகை ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று குழந்தைகளுடன் பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சூண்டி பகுதியைச் சேர்ந்த பெண் (ரமலா) திருமணமாகி 16 ஆண்டுகளாகிய நிலையில் மேட்டுப்பாளையம் சிறுமுகையில் வசித்து வருகிறார். தனக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும், தன் கணவர் முஸ்தபா பெண் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும் மற்றும் தங்களை சித்ரவதை செய்வதாகவும் பலமுறை சிறுமுகை காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, தனியாக தனது சகோதரி வீட்டில் உள்ள தங்களிடத்தில் தனது கணவர் கொன்றுவிடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டி வருவதாக தீக்குளிக்க முயன்ற பெண் உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினரிடம் கூறினார்.



எனவே, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தித் தரவேண்டும், தனது கணவரால் எந்நேரமும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இதற்கான தீர்வு கிடைக்க வேண்டுமென்று தீக்குளிக்க முயன்றதாகவும் நடவடிக்கை எடுக்காவிடில் தான் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர தனக்கு வேறு வழி இல்லை என கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போலீசாரிடம் கூறினார்.

உதகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...