நீலகிரி: பெண் குழந்தையை கணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறி உதகை ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று குழந்தைகளுடன் பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: பெண் குழந்தையை கணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறி உதகை ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று குழந்தைகளுடன் பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சூண்டி பகுதியைச் சேர்ந்த பெண் (ரமலா) திருமணமாகி 16 ஆண்டுகளாகிய நிலையில் மேட்டுப்பாளையம் சிறுமுகையில் வசித்து வருகிறார். தனக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும், தன் கணவர் முஸ்தபா பெண் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும் மற்றும் தங்களை சித்ரவதை செய்வதாகவும் பலமுறை சிறுமுகை காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, தனியாக தனது சகோதரி வீட்டில் உள்ள தங்களிடத்தில் தனது கணவர் கொன்றுவிடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டி வருவதாக தீக்குளிக்க முயன்ற பெண் உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினரிடம் கூறினார்.

எனவே, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தித் தரவேண்டும், தனது கணவரால் எந்நேரமும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இதற்கான தீர்வு கிடைக்க வேண்டுமென்று தீக்குளிக்க முயன்றதாகவும் நடவடிக்கை எடுக்காவிடில் தான் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர தனக்கு வேறு வழி இல்லை என கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போலீசாரிடம் கூறினார்.
உதகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சூண்டி பகுதியைச் சேர்ந்த பெண் (ரமலா) திருமணமாகி 16 ஆண்டுகளாகிய நிலையில் மேட்டுப்பாளையம் சிறுமுகையில் வசித்து வருகிறார். தனக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும், தன் கணவர் முஸ்தபா பெண் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும் மற்றும் தங்களை சித்ரவதை செய்வதாகவும் பலமுறை சிறுமுகை காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, தனியாக தனது சகோதரி வீட்டில் உள்ள தங்களிடத்தில் தனது கணவர் கொன்றுவிடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டி வருவதாக தீக்குளிக்க முயன்ற பெண் உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினரிடம் கூறினார்.

எனவே, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தித் தரவேண்டும், தனது கணவரால் எந்நேரமும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இதற்கான தீர்வு கிடைக்க வேண்டுமென்று தீக்குளிக்க முயன்றதாகவும் நடவடிக்கை எடுக்காவிடில் தான் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர தனக்கு வேறு வழி இல்லை என கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போலீசாரிடம் கூறினார்.
உதகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.